தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதுமுகங்கள் நடித்துள்ள, கிடா பூசாரி மகுடி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, என்னை வாழ்த்துரை வழங்க சொன்னார்கள். என்னவென்று வாழ்த்துவது, நான் இப்படத்திற்கு இசையமைத்திருப்பதே பெரிய வாழ்த்துரை தானே... பாக்யராஜ் பேசும்போது சொன்னார், நான்(பாக்யராஜ்) நடிக்கிறேன், கதை எழுதுகிறேன், திரைக்கதை அமைக்கிறேன், எடிட்டிங் வேலையை கவனிக்கிறேன்..... , ஆனால் நானோ(இளையராஜா) ஒரே ஒரு முறை தான் படம் பார்க்கிறேன், உடனே படத்திற்கான இசையை கொடுத்து விடுகிறார் என்று கூறினார்.
பாக்யராஜ் போன்றவர்கள், அணையில் உள்ள எட்டு மதகுகள் போன்றவர்கள், அவர்கள் பலதுறைகளை கையாளுகிறார்கள். நான் ஒரே ஒரு மதகு போன்றவன். எனக்கு இசை மட்டும் தான் தெரியும், வேறு எதுவும் தெரியாது. அதனால் அதன் வேகம் அப்படித்தான் இருக்கும். எப்போது இந்த தொழிலுக்கு வந்தேனோ.. அப்போது எப்படி முழு ஈடுபாடோடு உழைத்தேனோ... இப்போதும் அப்படி தான், அதே வேகத்தோடு உழைக்கிறேன். அரைமணி நேரத்தில் 5 படங்களுக்கு, அதாவது ஒரு படத்திற்கு நான்கு பாடல்கள் வீதம் 20 பாடல்கள் கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறேன். இதற்கு சாட்சி யாரும் தேவையில்லை, நான் மனசாட்சியோடு நடப்பவன், எப்போதும் சத்தியம் தான் பேசுவேன்.
கடந்தவாரம் கூட ருத்ரமாதேவி படத்திற்கு சிம்போனி இசையமைக்க லண்டன் சென்றேன். உலகளவில் கைதேர்ந்த 120 இசை கலைஞர்களுக்கான இசை 15 நாட்கள் தயார் செய்து கொண்டு போனேன். இந்த படத்திற்கு தான் 15 நாட்கள் எடுத்துள்ளேன்.
இதுதான் இசை என்று தெரிந்துவிட்டால் உட்கார்ந்து விடுவேன். ஆனால் எனக்கு இசை பற்றி இன்னும் எதுவும் தெரியாது, அதை தொடர்ந்து தேடிக் கொண்டு இருக்கிறேன். திருவள்ளுவர், திருக்குறளை எழுதும் போது தெரியாமல் தான் எழுதினார். அதேப்போல் உங்களுக்கும், எனக்கும் தெரியாத இசையை கொடுக்கத்தான் நான் நினைக்கிறேன். அதன் வெளிப்பாடாக எனது இசையும் வந்து கொண்டிருக்கிறது.
ஒரு மனிதனுக்கு கற்பனை திறன் என்பது வேறு, நடைமுறை வாழ்க்கை என்பது வேறு... ஆனால் நான் இந்த இரண்டையும் சரிசமமாக எண்ணி பயணித்து, இசையை கொடுத்து கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் இப்போதும் ரசித்து கொண்டிருக்கிறீர்கள். எத்தனை காலம் கடந்தாலும் எனது இசை, காலம் கடந்து நிற்கும். அதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் கிடையாது. இறைவன் எனக்கு அப்படியொரு வரத்தை அளித்துள்ளான். இந்தப்படம் நல்ல முறையில் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.