மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
என்ன பேசுகிறோம் என தெரிந்தே, எகிடு தகிடாக எதையாவது பேசி, வான்ட்டடாக வம்பை விலைகொடுத்து வாங்குவதில் சர்ச்சை நாயகன் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. சில மாதங்களுக்கு முன் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 15௦0வது படத்தை சிரஞ்சீவியே இயக்கினால், அது நிச்சயம் அவரது முந்தைய கண்டுபிடிப்பான பிரஜா ராஜ்ஜியம் கட்சியை விட மோசமாக இருந்துவிடாது என்று நம்பலாம்” என அவரை மோசமாக விமர்சித்தார்.
இப்போது லேட்டஸ்ட்டாக அவரது வாய்க்கு அவலாக சிக்கியிருப்பவர் மலையாள மெகாஸ்டார் மம்முட்டி.. சமீபத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தை பார்த்துவிட்டு “தனது மகனை பார்த்தாவது மம்முட்டி எப்படி இயல்பாக நடிப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.. இத்தனை வருடங்களாக அவர் செய்யாததை, வந்த சில வருடங்களிலேயே அவரது மகன் துல்கர் சல்மான் செய்துகாட்டி மலையாளிகளை பெருமைப்பட வைத்துவிட்டார்.” என மகனை புகழ்ந்துள்ள அதே நேரத்தில், தந்தையின் நடிப்பை அவமானப்படுத்தும் விதமாக டுவீட் போட்டுள்ளார்.