ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
எந்த ஒரு நடிகருக்குமே வெற்றியை மட்டுமே சுவைப்பதுதான் பிடிக்கும். ஒரு தோல்வி வந்துவிட்டால், அதை உடனடியாக வெற்றியாக மாற்றுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் ரஜினிகாந்த் இப்போது உள்ளாராம். 'லிங்கா' படத்தின் தோல்வி அவரை நிறையவே பாதித்துவிட்டது. மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்ததன் விளைவுதான் ஷங்கரை தனக்காக ஒரு படம் இயக்கிக் கொடுக்கச் சொல்வது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டதாம்.
இந்த செய்தியை முதன் முதலாக நாம்தான் முதலில் வெளியிட்டோம். அதன் தொடர்ச்சியாக பலரும் அந்த செய்தியை பின்பற்றி பல தரப்பட்ட செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். நேற்று கூட கமலுக்குப் பதிலாக விக்ரம் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டார்கள்.
'லிங்கா' படத்திலேயே ரஜினிக்கு அவருடைய உடல்நிலை கருதி அதிகமான ஆக்ஷன் காட்சிகளையும், நடனக் காட்சிகளையும் வைக்கவில்லை. அவருடைய வேகமான ஸ்டைல் நடிப்பையும் படம் முழுவதும் பார்க்க முடியவில்லை. அதுவும் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
தனக்கு அடுத்தடுத்து “சிவாஜி, எந்திரன்” ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்த ஷங்கரால் மட்டுமே இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு அதிரடியான படத்தைக் கொடுக்க முடியும் என்று ரஜினி நம்புகிறாராம். 'ஐ' படத்திலேயே முந்தைய தன்னுடைய படங்களைப் போல் அல்லாமல் படைப்பில் கொஞ்சம் சறுக்கிய ஷங்கரால், எழுத்தாள சுஜாதா போன்று நல்லதொரு வலது கரம் இல்லாத்ததால் ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டாருக்கு சரியாக 'கை' கொடுக்க முடியுமா என்பதுதான் கோலிவுட் வட்டாரங்களில் தற்போதைய பேச்சாக உள்ளது.