மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கு திரையின் இளவரசனான நடிகர் மகேஷ் பாபு தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து, இயக்குநர் கோரடல சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் நடிகர் மகேஷ் பாபு செய்துள்ள காரியத்தை அறிந்த ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவில் நடைபெறவுள்ள TANA கருத்தரங்கில் நடிகர் மகேஷ் பாபு பங்கெடுப்பதால் அவருக்கு 1.5 கோடி வழங்கப்படும் என கூறப்பட்டது. நடிகர் மகேஷ் பாபு அந்த தொகையினை உடல் நலம் குன்றியுள்ள குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு வழங்க முன்வந்துள்ளார். அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குழந்தைகளின் மறுவாழ்விற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளதாம். இதனை அறிந்த ரசிகர்கள் மகேஷ் பாபுவிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.