பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹிந்தித் திரையுலகில் 80களின் இறுதியிலும் 90களிலும் இரண்டே இரண்டு ஹீரோயின்கள்தான் மிகவும் பாப்புலர் ஆக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஸ்ரீதேவி, மற்றொருவர் மாதுரி தீட்சித். தங்களது அழகாலும், நடனத்தாலும், ஆடை அலங்காரத்தாலும் ஆண்களை மட்டும் அதிகம் கவராமல், பெண்களையும் அதிகம் பொறாமைப்பட வைத்தார்கள். அவர்கள் இருவரும் நடித்த பல படங்கள் சாதனைகளுக்குரிய படங்களாக அமைந்தன.
அப்போதே இருவருக்கும் இடையே மோதல், பனிப்போர், என செய்திகள் வெளிவந்தன. அவர்கள் இருவரும் சந்தித்தால் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஒருவரைப் பற்றி மற்றொருவர் எந்தக் கருத்தையும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. இத்தனைக்கும் ஸ்ரீதேவியின் கொழுந்தன் அனில் கபூருடன் சில வெற்றிப் படங்களில் நடித்தவர்தான் மாதுரி தீட்சித்.
அவர்களிடையே அப்போதிருந்த போட்டி, பகை இப்போதும் தொடர்கிறது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் ஸ்ரீதேவி அங்கிருந்து கிளம்பும் சமயம், மாதுரி உள்ளே நுழைந்தாராம். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருந்தும் இருவருமே முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டார்கள் என அதை நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். இந்த விவகாரம் பாலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.