ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் ஸ்டில்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் புலி. சரித்திர பின்னணியில், பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தில், விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சிம்புதேவன் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய் அரசராக நடிக்கிறார், குள்ளமாக நடிக்கிறார், இரண்டு வேடங்களில் நடிக்கிறார், மூன்று வேடங்களில் நடிக்கிறார்.... என இப்படம் பற்றி தினம் ஒரு செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் படக்குழு இதுப்பற்றி வாயே திறக்கவில்லை. அதுமட்டுமின்றி இப்படம் பற்றிய ஒரு போட்டோ கூட இதுவரை வெளியிடப்படவில்லை. அவ்வளவு ரகசியமாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் புலி ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்... என சில ஸ்டில்கள் வெளியாகின. அதில் விஜய், வெள்ளை வேஷ்டி-சட்டை அணிந்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இணையதளங்களில் விஜய்யின் புலி படத்திலிருந்து ஒரு ஸ்டில் வெளியாகி உள்ளது. அதில் விஜய், வேட்டைக்காரன் போன்று உடை அணிந்து நடந்து வருகிறார். இப்படியொரு ஸ்டில் வெளியாகி இருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுப்பற்றி இப்படத்தில் நடித்து வரும் வித்யூலேகா ராமன் கூறியிருப்பதாவது, புலி படத்தின் முதல்பார்வை தயாராகி வருகிறது. 6 மாதமாக பாதுகாத்து வந்த புலி படத்தின் ஸ்டில், இப்போது கள்ளத்தனமாக வெளியாகியிருப்பதும் எரிச்சலாகவும், ஏமாற்றமாகவும் அனைவரையும் மன வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.