தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மிருகம், உயிர், சிந்து சமவெளி என சர்ச்சை படங்களை இயக்கிய சாமி, அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து கங்காரு என்ற படத்தை இயக்கியுள்ளார். அர்ஜூன், வர்ஷா, ப்ரியங்கா, தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த கங்காரு படம் ஒருவழியாக வருகிற ஏப்ரல் 24ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
கங்காரு படம் பற்றி இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள அர்ஜூன் கூறியதாவது, நான் படித்தது பி.இ., சினிமா மீது கொண்ட 100 சதவீத காதலால் சினிமாவுக்கு வந்தேன். மிருகம் படத்திலேயே ஆதியின் ரோலில் நான் நடிக்க வேண்டியது. ஆனால் அது மிஸ்ஸாகிவிட்டது. அதன்பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் அண்ணனாக நடித்தேன். இந்தப்படத்தில் ஒரு முழுநீள ரோலில் நடித்துள்ளேன். ஒரே வீட்டில் வாழும் அண்ணன்-தங்கையின் பாசம் தான் கங்காரு படத்தின் கதை. இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க கொடைக்கானல் பகுதியில் நடந்தது. இங்கு ஷூட்டிங் நடந்தபோது பலமுறை காலில் செருப்பில்லாமல் நடித்தேன். குறிப்பாக ஒரு சண்டைக்காட்சியின் போது என் கால் கட்டை விரலில் உள்ள நகம் தனியாக பியித்து வெளியே வந்துவிட்டது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டு உண்மையாக நடித்தேன். கங்காரு படத்திற்கு பிறகு நிச்சயம் எனக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என நம்புகிறேன்.
இவ்வாறு அர்ஜூன் கூறினார்.