டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார் ருக்மணி அசோக்குமார். கமலஹாசனுடன் பாடியது ஆஸ்கர் விருது கிடைத்த மாதிரி இருக்கிறது என்கிறார் ருக்மணி.
அவர் மேலும் கூறியதாவது: நான் முறைப்படி கர்நாடக சங்கீதம் படித்திருக்கிறேன். ஹிந்துஸ்தானி படித்து வருகிறேன். சினிமா பாடகியாக வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியம். இதற்கான எனது தேடல் தொடர்ந்தது. ஒரு ஆடியோ விழாவில் இசை அமைப்பாளர் ஜிப்ரானை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். குரலை பதிவு செய்து ஒரு சிடி தாருங்கள் என்றார். நான் தேவா இசையில் பாடிய சாய்பாபா சிடியை கொடுத்தேன். அதை கேட்டுவிட்டு குரல் நன்றாக இருக்கிறது. ஒரு பாடல் தருகிறேன் பாடுங்கள் ஆனால் முக்கியமான ஒருவருக்கு உங்கள் குரல் பிடித்திருந்தால்தான் அது படத்தில் வரும் என்று வாய்ப்பு கொடுத்தார். நானும் பாடிவிட்டு வந்தேன்.
மார்ச் 1ந் தேதி வரை நான் எந்த படத்துக்கு பாடினேன், அந்த பாடல் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது. அப்புறம்தான் நான் பாடியது உத்தமவில்லன் படத்துக்காக என்பதும், அதை ஓகே செய்தவர் கமல் என்பதும், உடன் பாடியிருப்பவரும் அவர்தான் என்பதும் தெரிந்தது. என் வாழ்க்கையில் புதிய லட்சியத்தை அடைந்த விட்ட மாதிரி இருந்தது. கமலை நேரில் சந்தித்து அவரிடம் ஆசியும், வாழ்த்தும் பெற்றுத் திரும்பினேன். படத்தில் வரும் இரணியன் நாடகத்தில் நான் பாடிய பாடல் இடம்பெறுகிறது. கமல் சாரின் ஆசியுடன் தொடர்ந்து சினிமாவில் பாடுவேன் என்கிறார் ருக்மணி அசோக்குமார்.