சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ராவணன், கடல் என தோல்விகளை சந்தித்து வந்த மணிரத்னத்திற்கு புது தெம்பை கொடுத்திருக்கிறது ஓ காதல் கண்மணி படம். மம்முட்டி மகன் துல்கர் சல்மானும், நித்யா மேனனும் நடித்துள்ள இப்படம் தாலிகட்டாமல் கணவன்-மனைவியாக வாழ்வதை பற்றி இப்படம் சொல்லியிருக்கிறது. அதோடு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. மணிரத்னம் இஸ் பேக் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஓ காதல் கண்மணி படம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் மணிரத்னம்.
அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, என்னுடைய அனுமதி இன்றி ஓ காதல் கண்மணி படத்தை இணையதளங்களில் திருட்டுதனமாக வெளியிட்டுள்ளனர். இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, இணையதளத்தில் படத்தை வெளியிட்டுள்ளதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.