விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தன் சொந்த ஊரான தமிழ்நாட்டிலும் முதலிடத்தைப் பிடிக்கும் ஆவலில் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார். தமிழில் நான்கைந்து படங்களில் நடித்திருந்தாலும் விஜய்யுடன் ஜோடியாக நடித்த 'கத்தி' படம் ஹிட் ஆன பிறகுதான் ராசியான ஹீரோயின்களில் பட்டியலில் இடம் பிடித்தார். இப்போது விக்ரமுன் '10 எண்றதுக்குள்ளே' படத்தில் நடித்து முடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில்தான் சமந்தா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்ப் பெண்ணாக ஒரு கதாபாத்திரத்திலும், நேபாளப் பெண்ணாக வேறு ஒரு கதாபாத்திரத்திலும் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்கிறார்கள். அதை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். சமீபத்தில் கூட இந்தப் படத்தின் சண்டைக் காட்சியை நேபாளத்தில் படமாக்கினார்கள்.
இந்தப் படத்தைப் பற்றி சமந்தாவும் பெருமையாகப் பேசி வருகிறார். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு படத்தில், கதாபாத்திரத்தில் தான் நடித்ததில்லை எனக் கூறி வருகிறார். 'கோலி சோடா' படத்திற்குப் பின் விஜய் மில்டன் இயக்கி வரும் '10 எண்றதுக்குள்ளே' படத்தில் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். ஜுன் மாதம் இப்படம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.