ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் ஏதாவது ஒரு காரணத்தை முன் வைத்து படத்தை தடை செய் என்று ஏதாவது ஒரு அமைப்பு அல்லது அரசியல் கட்சி குரல் கொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. கொம்பன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு பிரச்சனை கிளம்பியது. அதை சட்ட ரீதியாக முறியடித்தனர். தற்போது உத்தமவில்லன் படத்தை தடை செய் என்று சிலர் முழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சாமி இயக்கத்தில், வரும் 24 ஆம் தேதி வெளி வர உள்ள கங்காரு படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் ஒருவர். தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்றக்கழகம், ஆதித்தமிழர் விடுதலைக்கழகம் என்ற அமைப்பின் சார்பில் அதன் நிறுவனத் தலைவரான சதாசிவக்குமார் என்பவர்தான் கங்காரு படத்துக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அவர் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பி இருக்கிறார். அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயம் பகீர் ரகம்.
அண்ணன் தங்கை பாசக்கதை என்று சொல்லப்படுகிற கங்காரு படத்தில் ஆபாசத்தின் உச்சமாக சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார் சதாசிவக்குமார். அதாவது அண்ணன் தங்கை பாசம் என்ற பெயரில் தன் தங்கை மீது அண்ணன் மோகம் கொள்வதுபோலவும், அண்ணன் தங்கை இருவரும் உடலுறவு கொள்வது போலவும் கங்காரு படத்தில் காட்சிகளை வைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒரு மனநோயாளியின் செயல் என்று நியாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பல அதிர்ச்சித் தகவல்களை கூறி இருக்கிறார். இதன் காரணமாகவே கங்காரு படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்.
சதா சிவக்குமார் சொல்வது உண்மையா? கொழுந்தன் உடன் உறவு கொள்ளத்துடிக்கும் அண்ணி, மருமகள் உடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள மாமனார் என பலான கதைகளை படமாக எடுத்தவர் சாமி. எனவே தற்போது அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி இயக்குநர் சாமிதான் விளக்கம் சொல்ல வேண்டும்.