ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜ்மோகன். இந்த இரண்டு படங்களுக்குமே யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில், வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணா, மா.க.பா.ஆனந்த் ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்க, மோனல் கஜார் ஹீரோயினாக நடித்தார். இப்படம் ஓரளவு வெற்றி பெற்றது. அதனால் அதையடுத்து மீண்டும் ஒரு கிராமத்து கதையை ரெடி பண்ணியுள்ள ராஜ்மோகன், அடுத்தபடியாக மார்க்கெட்டில் பேசப்படும் நடிகர் யாரையாவது வைத்துதான் இயக்க வேண்டும் என்று சில நடிகர்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார். அதில் அட்டகத்தி தினேஷ் குறிப்பிடத்தக்கவராம். அவருக்குதான் ராஜ்மோகன் உருவாக்கியுள்ள படம் பொருத்தமாக இருக்குமாம். அதனால் அவரிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். ஆனால் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தினேஷ் இன்னும் அவருக்கு சரியான பதில் கொடுக்கவில்லையாம்.