'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சூது கவ்வும்' படம் மூலம் பரவலாக அறியப்பட்ட அறிமுக நடிகர் அஷோக் செல்வன். அடுத்து பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான 'தி வில்லா' படத்தில் தனி ஹீரோவாக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரமேஷ் இயக்கத்தில் 'தெகிடி' என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார். விமர்சனரீதியாக மட்டுமல்ல, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது தெகிடி. தெகிடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஷோக் செல்வனைத் தேடி இப்போது வாய்ப்புகள் வரத்தொடங்கி இருக்கின்றன. அருண்பாண்டியன் தயாரிக்கும் சவாலே சமாளி, 144, வரைபடம் ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் அஷோக் செல்வன். தவிர 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படத்திலும் நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். முழுக்க முழுக்க ரொமான்டிக் கதையான இப்படத்தை ஞானவேல் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
இவர் பிரகாஷ் ராஜின் 'தோனி' படத்திற்கு வசனம் எழுதியவர். 'கூட்டத்தில் ஒருவன்' அஷோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.