ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிரிக்கெட்டிலும், சினிமாவிலும் 'ஃபார்ம்'ல் இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் இரண்டு ரசிகர்களுமே அந்தப் பிரபலங்களை கிண்டலடித்தே நோக வைத்து விடுவார்கள். 80களில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அடையாளத்துடன் நுழைந்த மணிரத்னம் கடந்த சில வருடங்களாக இயக்கிய படங்கள் வெற்றி பெறவில்லை என்றதும் அவருடைய படைப்பைப் பற்றி பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அதிலும் 'கடல்' படத்தைப் பார்த்ததும் மணிரத்னத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர். அப்போதே சில பிரபலங்கள் மணிரத்னம் என்றுமே மணிரத்னம்தான் அவரை இப்படியா விமர்சிப்பது என்றெல்லாம் ஆதங்கப்பட்டார்கள்.
அதன் விளைவுதான் 'ஓ காதல் கண்மணி' படம் வெளிவருவதற்கு முன்பு 'மவுஸ் வைத்திருப்பவர்கள் எல்லாம் விமர்சிக்க வந்து விட்டார்கள்' என்று சுஹாசினி கொளுத்திப் போடவும் காரணமாக அமைந்தது. படத்தைப் பார்த்த பின் சுஹாசினி சொன்னதை பலரும் மறந்து விட்டார்கள், அப்படியே ஞாபகத்தில் வைத்துள்ளவர்களும் அதைப் பற்றி பெரிதாக கமெண்ட் அடிக்கவில்லை.
இதனிடையே படத்தைப் பார்த்த ரசிகர்கள் 'மணிரத்னம் இஸ் பேக்', அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று படத்தைக் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். அவர்களோடு பல திரையுலகப் பிரபலங்களும் படத்தைப் பார்த்து மணிரத்னத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். சிலர் வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் பாராட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.