இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
''நடுநிசி நாய்கள்'', ''நீ தானே என் பொன் வசந்தம்'' என தொடர் தோல்விகளை கொடுத்த கெளதம் மேனனுக்கு அஜித்தின், ''என்னை அறிந்தால்'' படம் புது தெம்பை கொடுத்திருக்கிறது. இதே தெம்புடன் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இறங்கியிருக்கிறார் கெளதம் மேனன். தற்போது சிம்புவை வைத்து ''அச்சம் என்பது மடமையடா'' படத்தை இயக்கி வருபவர், அடுத்தப்படியாக விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார் கெளதம் மேனன்.
இதுகுறித்து தனது டுவிட்டர் வலைபக்கத்தில் கெளதம் மேனன் கூறியிருப்பதாவது, ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மணி சார் மீண்டும் தனது டிரெண்ட்டை கொண்டு வந்துள்ளார். எனக்கும் இதுபோன்று ஒரு காதல் கதை இயக்க வேண்டும் என தோன்றுகிறது என்று கூறியிருப்பவர், ஓ காதல் கண்மணி படத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.