‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சச்சினைக்கூட தெரியாத நடிகை ஒருவர் இங்கே இருக்கிறாரா என்றோ, அல்லது அப்படி தெரியாத ஒரு நடிகைக்கு மோகன்லால் தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு அவருக்கு சச்சின் மீது என்ன கோபம் என தயவுசெய்து அனர்த்தம் எதுவும் பண்ணிக்கொள்ள வேண்டாம்.. தமிழில் வெண்ணிலா வீடு படத்தில் கிட்டத்தட்ட வில்லியாக நடித்தாரே மலையாள நடிகை சிருந்தா ஆசப், அவர்தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டவர்.
அவருக்குத்தான் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'லோஹம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிக்க என்பதைவிட, ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும். ஒரு பாட்டுக்கு ஆடும் அளவுக்கு அவர் ஐட்டம் சாங் நடிகையும் அல்ல.. அதற்கான உடல்வாகும் அவரிடம் இல்லை. ஆனால் மோகன்லால் படம் என்பதாலேயே கேட்டதுமே ஒத்துக்கொண்டாராம் சிருந்தா. அதுசரி.. அவருக்கு உண்மையிலே சச்சினை யாரென்று தெரியாதா..? நிஜமாகவே அப்படி ஒரு கேள்வியை கேட்டாரா என்கிற கேள்வி மனதை உறுத்துகிறது தானே..?