இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னை பகுதியின் சுமார் 60 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மாதம் தோறும் உணவுக்குத் தேவையான பொருட்களை தங்களது 'புட்பேங்க்' எனப்படும் உணவு வங்கி மூலம் வழங்கி வருகிறார்கள் 'ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ' என்கிற சென்னைவாழ் ராஜஸ்தான் இளைஞர் சங்கம். ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ தங்கள் 22 ஆம் ஆண்டு செயல்திட்ட தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடினர். ஆதரவற்ற இயலாத குழந்தைகள் 1008 பேரை அழைத்து வந்து அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் கலந்துகொண்டு குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் இசைக் கச்சேரியில் பாடி மகிழ்வித்தார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் சக்தி அண்ட் சாய் இசைக்குழுவினர் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழந்தைகள் பலரும் மன எழுச்சியுடன் ஆடி மகிழ்ந்தனர்.
குழந்தைகளின் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமைந்த இந்த இசை நிகழ்ச்சியில் நடிகைகள் சோனா, அர்ச்சனா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சின்னத்திரை நட்சத்திரம் சோனியா, ஸ்ரீ மஞ்சுளா, உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.