ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கலக்குற சந்துரு, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், சூப்பர்டா படங்களில் நடித்தவர் நடிகை அனுஜா என்கிற புவனேஸ்வரி. தற்போது சென்னையில் வசித்து வரும் புவனேஸ்வரி, கோவை அருகில் உள்ள அன்னூரைச் சேர்ந்தவர். அங்கு அவருக்கு ஒரு வீடும், வீட்டை ஒட்டி ஒரு தியேட்டரும் உள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு தனது வீட்டை தென்னம்பாளையத்தைச் சேர்ந்த வியாபாரி சுப்பிரமணியம் என்பவருக்கு விற்றார். வீடு மட்டுமே அவருக்கு விற்கப்பட்டது ஆனால் அவர் பத்திரத்தில் மோசடி செய்து தியேட்டரையும் அபகரித்து விட்டதாக புவனேஸ்வரி போலீசில் புகார் செய்தார்.
ஆனாலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி முதல்வரின் தனிப்பிரிவில் புகார் செய்தார். இந்த மனு மீது கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து வியாபாரி சுப்பிரமணியம் மீது சொத்து மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.