எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் பிரகாஷ்ராஜ். சமீபகாலமாக அதிகமான படங்களில் நடிக்காமல் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் வரை எந்தப் படத்தை எடுத்தாலும் அதில் அவர்தான் வில்லனாக இருப்பார். இப்போது புதிது புதிதாக மும்பையிலிருந்து வில்லன்களையும் நமது இயக்குனர்கள் அறிமுகப்படுத்துவதால் பிரகாஷ்ராஜ் போன்றோர் குணச்சித்திரம் பக்கம் பார்வையைத் திருப்பி விட்டார்கள்.
கடந்த வாரம் வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படத்தில் ஒரு அற்புதமான குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் பிரகாஷ்ராஜ். கணபதி என்ற ஒரு 60 வயதைக் கடந்த வயதான ஒரு கதாபாத்திரத்தில் பாசமான கணவனாக நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். காதல் என்பது வயதைக் கடந்தும், காமத்தைக் கடந்ததும் இருக்கும் ஒரு விஷயம் என அவரது கதாபாத்திரம் மூலம் உணர்த்தியிருப்பார் மணிரத்னம்.
கணபதி கதாபாத்திரத்தில் தன்னுடைய ஓவர் ஆக்டிங் நடிப்பையெல்லாம் ஓரம் தள்ளி வைத்து விட்டு ஒரு யதார்த்தமான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய பிரகாஷ்ராஜை திரையுலகத்தினரும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். பிரகாஜ்ராஜ் மனைவியாக நடித்துள்ள லீலா சாம்சனும் அவ்வளவு யதார்த்தமாக நடித்திருப்பார். உண்மையில் படத்தில் உள்ள இளம் காதல் ஜோடிகளான துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரை விட பிரகாஷ்ராஜ் - லீலா சாம்சன் ஜோடிதான் பலரையும் கவர்ந்துள்ளது.
பிரகாஷ்ராஜின் நடிப்பு நிச்சயம் தேசிய விருதுக்குரிய நடிப்பு என்று தாராளமாகச் சொல்லலாம்.