ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் அறிமுக நாயகி ஸ்ரீதிவ்யாவிற்கு அதன் பின் வெளிவந்த 'ஜீவா' படம் மிகச் சுமாரான வெற்றியையும், 'காக்கி சட்டை' நல்ல வெற்றியையும் பெற்றுத் தந்தது. தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக 'பென்சில்' படத்திலும், அதர்வா ஜோடியாக 'ஈட்டி' படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகியாக நடித்த 'வராதி' படம் கடந்த வாரம் வெளியானது.
தமிழில் ரேவதி, சினேகா போல கிளாமர் அல்லாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இந்தக் காலத்தில் கிளாமராக, மாடர்ன் உடைகளில் மும்பை நட்சத்திரங்களோடு பல நடிகைகள் போட்டி போடும் சூழ்நிலையில் கிளாமராக நடிக்காமலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் ஸ்ரீதிவ்யா. சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் எப்போதுமே கிளாமராகவோ, முத்தக் காட்சியிலோ நடிக்கவே மாட்டேன்.
குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் தான் என்னால் எளிதாக நடிக்க முடியும். முத்தக் காட்சி, கிளாமர் நடிப்பு ஆகியவற்றிற்கு எதிரானவள் நான். என்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளிலும் நான் நடிக்க மாட்டேன். முதலில் ஒரு கதாபாத்திரம் என்னைக் கவர வேண்டும். நான் சிறப்பாக நடிக்க அந்தக் கதாபாத்திரம் எனக்கு ஒரு சவாலைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும்,” எனக் கூறியிருக்கிறார்.
மேலும், திரைப்படங்களில் கௌதமி நடித்த கதாபாத்திரங்களைப் போல நடிக்க ஆசை என்றும் சொல்லியிருக்கிறார். எல்லாரும் ரேவதி, சுகாசினி, ராதா ஆகியோரை முன்மாதிரியாகச் சொல்வார்கள், அதிலும் ஸ்ரீதிவ்யா வித்தியாசமாக கௌதமியை சொல்லி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.