ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்குத் திரையுலகில் நேரடித் தமிழ்ப் படங்கள் அதிகம் வெளிவருகிறதோ இல்லையோ தமிழிலிருந்து வெளியாகும் டப்பிங் படங்கள் அதிகம் வருகிறது என்று தெலுங்குத் திரையுலகினரே ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு பண்டிகை சீசனிலும் தமிழில் வெளியாகும் பெரிய படங்கள் அனைத்துமே அதே நாளிலோ, அடுத்த வாரத்திலோ தெலுங்கில் வெளியாகி விடுகின்றன.
தற்போது 'ஓ காதல் கண்மணி, ஜில்லா, இது கதிர்வேலன் காதல், உத்தம வில்லன்' என வரிசையாக தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வருகின்றன. வாரத்திற்கு ஒரு படம் என தொடர்ச்சியாக டப்பிங் படங்கள் வெளிவர உள்ளதும், அதற்கு சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள் தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வருவதும் சில சிறிய தயாரிப்பாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இரு தினங்களுக்கு முன் வெளிவந்துள்ள 'ஓகே கண்மணி'யின் டப்பிங் வெர்ஷனான 'ஓகே பங்காரம்' படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி என்பதாலும், படத்திற்கு நல்ல விளம்பரம் செய்துள்ளதாலும் இம்மாதிரியான படங்கள் வசூலை அள்ளி வருவதாகச் சொல்கிறார்கள்.