Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரமை கவர்ந்த பாடலாசிரியர் மணிஅமுதன்!

19 ஏப், 2015 - 09:49 IST
எழுத்தின் அளவு:
Mani-Amuthavan-attracted-by-Vikram

கோலிசோடா உள்பட பல படங்களில் பாடல்கள் எழுதியவர் மணிஅமுதன். தற்போது பத்து எண்றதுக்குள்ள, சண்டிவீரன், உருமீன், க், இறைவி உள்பட பல படங்களுக்கு பிசியாக பாடல்கள் எழுதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.


அவரிடத்தில், டங்காமாரி, டண்டனக்கா போன்று அதிரடி கானா பாடல்கள் எழுதுவீர்களா? என்று கேட்டால், அதுமாதிரியான வாய்ப்புகள் வந்தால் எழுதலாம். கதைக்கான சூழலுக்குத்தான் நாம பாட்டெழுத வந்திருக்கோம். அதோடு சமுதாயத்தை சீரழிக்காம இருக்கிற வார்த்தைகளாக போட்டு எழுத ஆசைப்படுகிறேன். பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. கந்து வட்டி கடை போட்டுக்கூட சம்பாதிக்கலாம். அதனால் மக்களை தப்பான வழிக்கு திசை திருப்பாத வார்த்தைகளிலேயே பாடல்கள் எழுதுவேன்.


மேலும், இந்த மாதிரியான கானா பாடல்கள் அந்த நேரத்தில் வேண்டுமானால் ரசிகர்களை சந்தோசப்படுத்தி விட்டு செல்லலாம். ஆனால் நல்ல தரமான வார்த்தைகளில் எழுதும் பாடல்கள்தான் லைப்லாங்கா நிக்கும். அதனால் அந்த மாதிரியான பாடல்கள் எழுதினாலும் ஆரோக்யமான பாடல்கள் எழுதுவதற்கே நான் முதலிடம் கொடுப்பேன். சரியான அங்கீகாரங்கள் தரமான பாடல்களுக்குத்தான் கொடுக்கப்பட்டு வருகிறது.


குறிப்பாக, நாம எழுதுற பாடல் கேட்கிறவர்களை ஒரு ஐந்து நிமிசத்துக்கு சந்தோசப்படுத்தக்கூடியதாக, என் வாழ்க்கை பின்னோக்கி நகர வைத்து என்னை பீல் பண்ண வைத்தது என்று சொல்லும் பாடல்கள்தான் ஆத்மதிருப்தியை கொடுக்கும். அதனால் டங்காமாரி மாதிரி பாடல்கள் எழுதினாலும், அதற்கு முக்கியத்துவம் தரமாட்டேன்.


மேலும், கண்ணதாசன் பாடல்கள் இன்றைக்கும் காலத்தால் அழியாமல் நிற்கிறது என்றால் அதன் தரம்தான் காரணம். மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்ட பாடல்கள் இன்றைக்கும் மக்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவரது பெயரை சொல்லாத வாயே இல்லை. அவரது பாடல்களை கேட்காத காதுகளே இல்லை. அதனால் அவரது பாடல்களை கேட்டு வளர்ந்த எனக்கு, அந்த மாதிரியான காலத்தால் அழியாத, காலத்துக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிற சூழலுக்கான பாடல்களை எழுதுவதில்தான் அதிகப்படியான ஈடுபாடு உள்ளது.


சமீபத்தில் ஒரு பேட்டியில் கவிஞர் வைரமுத்து அவர்களிடம், கண்ணதாசனை மிஞ்சின பாடல்களை உங்களால் எழுத முடியுமா? என்று கேட்கப்பட்டபோது, அது யாராலும் முடியாது. இன்னொரு முறை கண்ணதாசனே பிறந்து வந்தால்தான் அது நடக்கும் என்றார். 6 தடவை தேசிய விருது பெற்ற வைரமுத்துவே அப்படி சொல்கிறார் என்றால் கண்ணதாசனின் இடம் எவ்வளவு பெரியது என்பது புரியும். அவர் மாதிரி காத்துக்குள் நாம நிலைச்சிருந்தா போதும்னு நெனைக்கிறேன்.


இருப்பினும் காலத்திற்கேற்ப நானும் சற்றே இளைப்பாரு -என்றொரு படத்தில் ஒரு கானா பாடல் எழுதியிருக்கிறேன். ஒபாமா பொண்ணை லவ் பண்ணினா என்னடா, ஒயிட் அவுசிலே புகுந்து தூக்கிட்டு வருவேன் என்றொரு பாடல். ப்ரண்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட பாடல் இது. ரொம்ப ராவா இருக்கும்.


அதோடு, சென்னையில் பிறந்தவங்களுக்கு இங்கே இருக்கிற அடிப்படை வார்த்தைகளை எழுத வாய்ப்பிருக்கு. ஆனா என்னை மாதிரி கிராமத்துல பிறந்தவங்களுக்கு அந்த பேக்ட்ராப்புல பாட்டு எழுதுறது ரொம்ப எளிமையாக இருக்கும். அதேமாதிரி கோலிசோடாவில் ஆல் இஸ் பியூட்டி -என்ற பாடலை சென்னை தமிழில்தான் எழுதியிருந்தேன். இருந்தாலும் நான் கிராமத்து சூழலில் இருந்து வந்ததால் அதுசார்ந்த வார்த்தைகளையும் இணைத்து எழுதியிருந்தேன். வாய்க்கால், வரப்பு, பறவைகள் என்று எல்லாமே கலந்து எழுதினேன்.


அதேபோல் இப்போது விக்ரம் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தில் பார்த்தா இவன் தீ, மின்சாரம் பாயும் கம்பி -என்றொரு ஹீரோ பில்டப் பாடலை எழுதியிருக்கிறேன். இந்த பாடல் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பல காட்சிகளில் இடம்பெறுகிறது. இதன் வரிகளை கேட்ட விக்ரம், வரிகள் ரொம்ப நல்லா இருக்கே யார் எழுதினது? என்று இயக்குனரிடம் கேட்டிருக்கிறார். அப்போது என்னோட கோலிசோடா படத்துல ஆல் இஸ் பியூட்டி என்ற பாடலை எழுதிய மணிஅமுதன் எழுதியிருக்கிறார் என்று விஜய்மில்டன் சொன்னாராம். இதையறிந்து ரொம்ப சந்தோசப்பட்டேன். அதோடு எனக்கு பெரிய எனர்ஜியாகவும் இருந்தது. ஆக, விக்ரம் சாருக்கு பிடித்த இந்த பில்டப் பாடல் ரசிகர்களுக்கும் ரொம்ப பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் பாடலாசிரியர் மணி அமுதன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in