மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
ரீ-என்ட்ரியில் 49ஓ, வாய்மை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. ஆனால் அந்த படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை.இந்த நிலையில், கவுண்டமணி நாயகனாக நடிக்கும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அதேபோன்றொரு டைட்டிலில் அதாவது, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற பெயரில் இன்னொரு படமும் பூஜை போடப்பட்டது. கவுண்டமணி நடிக்கும் படத்தில் டைட்டிலை புரொடியூசர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க, அந்த இன்னொரு படத்தின் டைட்டிலை கில்டில் பதிவு செய்துள்ளனர். இதனால் இரண்டு பட டைட்டில்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் பஞ்சாயத்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த டைட்டிலை முதலில் அறிவித்த கவுண்டமணி படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகன், இப்போதைக்கு டைட்டில் பிரச்சினையை கையில் எடுக்கப்போவதில்லை. எனது முழு கவனமும் படத்தை நல்லபடியாக இயக்க வேண்டும் என்பதில் மட்டுமே உள்ளது என்று சொல்லி அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளி வைத்து விட்டு கதை விவாதத்தில் மூழ்கினார்.
இந்த நிலையில், வருகிற 20-ந்தேதி முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார். முதலில் மதுரையில் லொகேசன் பார்த்திருந்த அவர், தற்போது கோடை வெயில் வறுத்து எடுப்பதால், கொடைக்கானலில் படப்பிடிப்பை தொடங்குகிறாராம். அதையடுத்து ஊட்டியிலும் படப்பிடிப்பு தொடர்ந்து, இறுதிகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறதாம்.