'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள ஓ காதல் கண்மணி படம் காதலர்கள் மத்தியில் மட்டுமல்லாது அனைத்து ரக திரைரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கிலும் திரைக்கு வந்த ஓகே கண்மணி படம், அங்கும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதிலும் தெலுங்கு ஓகே கண்மணி வரவேற்பிற்கு காரணமான நடிகர் நானி என்று கூறப்படுகின்றது. தெலுங்கில் நடிகர் துல்கர் சல்மானுக்கு பின்னணி பேசியுள்ளது நடிகர் நானி தானாம். இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகரான நானியை இயக்குநர் மணிரத்னம் அழைத்து நாயகனுக்கு பின்னணி பேசுமாறு கேட்டுக் கொண்டதும் மறுக்காமல் நானி ஒத்துக்கொண்டுள்ளார். தெலுங்கு ஓகே கண்மணி படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ள நானியின் குரலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றதாம்.