டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் நட்பதிகாரம் 79. இதில் பிரபல தயாரிப்பாளர் மல்லியம் ராஜகோபால் மகன் ராஜ்பரத், வல்லினம் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த அம்ஜத், தெலுங்கு நடிகை தேஜஸ்வி, ரேஷ்மி மேனன் நடித்துள்ளனர். தீபக் நீலாம்பூர் என்ற புதுமுகம் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது நட்பை பற்றிய படம் என்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன். அவர் மேலும் கூறியதாவது:
நட்பை பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவரை கவுரவப்படுத்தும் வகையில்தான் நட்பை பற்றிய குறள் அடங்கிய அதிகாரத்தின் தலைப்பை படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன். நட்பும் காதல் போலத்தான், ஊடலும், கூடலும் நிறைந்தது. சின்ன சின்ன விஷயங்கள் கூட காயப்படுத்தும். இரண்டு இளைஞர்கள், இரண்டு இளைஞிகள் நட்பாக இருக்கிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு எப்படி கையாளப்படுகிறது என்பதுதான் கதையின் களம். திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் என நட்பின் பரிமாணத்தை பேசுகிறது படம். நட்புக்கும் காதலுக்கும் இடையில் உள்ள இடைவெளி எது, அது எப்போது குறைகிறது, எப்போது இணைகிறது என்பது போன்ற மென்மையான விஷயங்களை சுட்டிக் காட்டுகிறது படம்.