தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் மன்சூரலிகான் தற்போது அதிரடி என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பெப்சி அல்லாத ஆட்களை வைத்து அவர் படப்பிடிப்பு நடத்துவதாக கூறி பெப்சி அமைப்பினர் அவருக்கு ரெட் போட்டனர். இதை எதிர்த்து மன்சூரலிகான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மன்சூரலிகான் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்தலாம் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. பெப்சி அல்லாத ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் "தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்திய கூட்டமைப்பு" என்ற புதிய சங்கத்தை தொடங்கி உள்ளார். இதன் துவக்க விழா ஜெர்மன் ஹாலில் நடந்தது. காங்கிரஸ் பிரமுகர் ஜே.எம். ஆருண், பூவை ஜேம்ஸ், விடுதலை சிறுத்தைகள் செயலாளர் வன்னியரசு, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் திருமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.