ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்டார் ஜோதிகா. கணவரின் தொழிலில் அவர் தலையிடுவதில்லை என்றாலும், சில விஷயங்களில் பிடிவாதமாக இருக்கிறார். கோடைவிடுமுறையில் குடும்பத்தினருடன் சூர்யா வெளிநாட்டுக்கு பிக்னிக் வந்தே தீர வேண்டும் என்பது அதில் ஒன்று. வருடம் முழுக்க படப்பிடிப்புக்காக ஓடிக்கொண்டே இருக்கும் சூர்யாவுக்கு ஒரே ரிலாக்ஸ் வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தினருடன் செல்லும் வெளிநாட்டுப்பயணம்தான் என்று நினைக்கிறாராம் ஜோதிகா.
எனவே அதை எக்காரணம் கொண்டும் தள்ளி வைக்கவோ... கேன்ஸல் பண்ணவோ விட மாட்டாராம். ஜோதிகாவின் ஆசைப்படி கடந்த சில வருடங்களாகவே கோடைவிடுமுறையில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சூர்யா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலே படம் மே மாதம் வெளிவருவதால் இந்த வருடம் வெளிநாடு செல்வதையே கேன்சல் பண்ணிவிட்டாராம் சூர்யா.
36 வயதினிலே படம் ரிலீஸ் ஆன உடனே அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் எண்ணத்தில் ஏகப்பட்ட கதைகளையும் கேட்டு வருகிறார் ஜோதிகா.