'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
கடந்த மாதம் 29-ந் தேதி நடைபெற்ற தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நடிகர் கல்யாண், ஐதராபாத் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்கும்படியும் தெரிவித்தார். நீதிமன்ற நிபந்தனைபடி கடந்த மாதம் 29-ந் தேதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டதால் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஜெயசுதா தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் ராஜேந்திர பிரசாத் 85 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரோஜா, இந்த தேர்தலை ஒழுங்கற்ற முறையில் முறைகேடுகளுடன் நடத்த துடித்தவர்களுக்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் வெற்றி,அவர்களது முகத்தில் அறைந்தது போல் அமைந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் தலைவர் பதவிக்கு வந்துள்ள ராஜேந்திர பிரசாத் தெலுங்கு திரையின் சிறிய கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.