அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஸ்ரீதிவ்யாவைப் போன்று தெலுங்கில் 3 படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் ஸ்ரீமுகி. ராட்டினம் படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமியின் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுடன் நடித்தார். ஆனால், அந்த படம் வெற்றி பெறாததால் அதையடுத்து ஸ்ரீமுகியை கோடம்பாக்கத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், சில கம்பெனிகளுக்கு நம்பிக்கையுடன் ஏறி இறங்கினார் ஸ்ரீமுகி. அதோடு, எட்டுத்திக்கும் மதயானையில் ஹோம்லியாக நடித்தபோதும், கிளாமர் கதைகளில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக கூறிவந்தார். ஆனபோதும், தோல்வி சென்டிமென்ட் காரணமாக அவருக்கு யாரும் வாய்ப்பு தரமுன்வரவில்லை. அதனால் மீண்டும் தெலுங்குக்கே சென்று விட்ட ஸ்ரீமுகி, தற்போது சந்திரிகா 2015 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்கும் பேசிக்கொண்டிருக்கிறாராம். இருப்பினும் தமிழிலும் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு அளவுக்கதிகமாக உள்ளதாம். அதனால், தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டே அஞ்சலி, ஸ்ரீதிவ்யா போன்று நானும் தமிழ்ப்படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று மீண்டும் கோடம்பாக்க டைரக்டர்களுக்கு தூது விட்டு வருகிறார் ஸ்ரீமுகி.