அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தெனாலிராமன் கொடுத்த தோல்வியை விரட்டியடித்து விட்டு வெற்றிப்பட ஹீரோவாகி விட வேண்டும் என்று எலி படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்துள்ளார் வடிவேலு. குறிப்பாக, இன்றைய கால கட்டத்தில் ஒரு திருடனுக்கு எந்தெந்த வகையில் ரிஸ்க் உள்ளது. அதை அவன் எப்படியெல்லாம் சமாளிக்கிறான் என்பதை ஒரு இலாகாவை வைத்து கதையை உருவாக்கி நடித்துள்ளார். அதோடு, ஹீரோயிசத்தையும் இந்த படத்தில் சற்று தூக்கலாக வெளிப்படுத்தியிருக்கும் வடிவேலு, இதற்கு முந்தைய படங்களை விட இந்த படத்தில் சதாவுடன் மற்ற ஹீரோக்களுக்கு இணையாக டச்சிங் கொடுத்து ஆட்டம் போட்டிருக்கிறார். அது கிளுகிளுப்பாகவும் படமாகியிருக்கிறதாம். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக இடைவிடாத படப்பிடிப்பு நடத்தி வந்த வடிவேலு தற்போது 95 சதவிகிதம் காட்சிகளில் நடித்து முடித்து விட்டார். இன்னும் இரண்டொரு பாடல்கள் மட்டுமே பாக்கி உள்ளதாம். இந்த நிலையில், தற்போது தான் நடித்துக்கொண்டிருந்தாலும், மற்ற கேரக்டர்களில் நடித்தவர்களை அழைத்து டப்பிங் பேசுமாறு கூறியுள்ளார். அதனால், படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, டப்பிங் வேலைகளும் துரிதமாக நடக்கிறது. எஞ்சியுள்ள பாடல் காட்சிகளில் நடித்து முடித்ததும் கடைசியாக வடிவேலு டப்பிங் பேசுகிறாராம். ஆக, கோடை விடுமுறையில் ரசிகர்களின் பார்வைக்கு வடிவேலுவின் எலி வருவது உறுதியாகி விட்டது என்கிறார்கள்.