டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தெலுங்கு நடிகர் சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் போட்டியிட்டனர். ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், அவர் போட்டியிலிருந்து விலகி விட்டார்.
பல்வேறு தெலுங்கு திரை பிரபலங்களுக்கு தேர்தலில் பங்கெடுத்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கின் காரணமாக தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 394 ஓட்டுகள் பதிவாகின. இதில் ராஜேந்திர பிரசாத்திற்கு 237 ஓட்டுகளும், ஜெயசுதாவுக்கு 152 ஓட்டுகளும் கிடைத்தன. 5ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ராஜேந்திர பிரசாத் 85 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செயலாளர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் அணியே வெற்றி பெற்றது.