ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் ரசிகர்களுக்கு ஓரளவு தெரிந்த முகமாக மாறியுள்ள துல்கர் சல்மான், இன்னும் தெலுங்கில் அவ்வளவாக பாப்புலர் ஆகவில்லை தான். ஆனாலும் தெலுங்கு ரசிகர்களிடம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார். மணிரத்னம் படத்தில் நடித்துவிட்டார் இல்லையா..? இனி தெலுங்கிற்கும் தெரிந்த முகம் ஆகத்தானே போகிறார்.. சரி.. எதற்காக மன்னிப்பு..? துல்கர் அப்படியென்ன தவறு செய்துவிட்டார்..?
ஒன்றுமில்லை.. மணிரத்னம் இயக்கத்தில், துல்கர் நடித்துள்ள 'ஓ காதல் கண்மணி' தெலுங்கில் 'ஓ பங்காரம்' என்கிற பெயரில் வெளியாகிறது தானே.. சில நாட்களுக்கு முன் ஆந்திராவில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. ஆனால் அதில் துல்கர் சல்மான் கலந்துகொள்ளவில்லை.
அதேநேரத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தான் அவரால் வரமுடியவில்லை என்றும், தன் மீது கோபம் வேண்டாம் என்றும் தெலுங்கு ரசிகர்களிடமும் விழாவில் கலந்துகொண்ட வி.ஐ.பி களிடமும் வருத்தம் தெரிவித்துள்ளார். துல்கரின் சார்பில் அவருடன் படத்தில் நடித்த நித்யா மேனன் சமீபத்தில் மீடியாவுக்கு அளித்த பேட்டியின்போது துல்கரின் வருத்தத்தையும் மன்னிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்..