தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
சினிமா ஹீரோக்கள் அனைவருக்கும்மே இப்போது பாடகராக வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. "அவரே பாடுகிறார் நான் பாடக்கூடாதா?" என்கிற ஈகோதான் அத்தனை ஹீரோக்களையும் பாடகர் ஆக்குகிறது. அதோடு இசை அமைப்பாளர்களும், நடிகர் நடிகைகளுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களை வலிய அழைத்து வந்து பாட வைக்கிறார்கள். ஒலிப்பதிவு கூடங்கள் பத்துக்கு பத்து அறைக்குள் சுருங்கிவிட்ட நிலையிலும், யார் பாடினாலும், குரலை கம்ப்யூட்டர் உதவியுடன் ஏற்றி இறக்கிக் கொள்ளலாம் என்பதாலும் இப்போது பாடகர் ஆவது எளிதாகிவிட்டது.
கமலஹாசனில் தொடங்கி இன்றைக்கு இருக்கிற காமெடியன்கள் வரை பாடத் தொடங்கிவிட்டார்கள். தற்போது தயாராகி வரும் அப்பாடக்கர் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்தப் படத்திற்காக இதுவரை சிம்பு, தேவா, இமான் பாடி விட்டார்கள். தற்போது படத்தின் ஹீரோ ஜெயம் ரவியையும் அழைத்து பாட வைத்து விட்டார் தமன். ஜெயம் ரவிக்கு அவரது குரல் கொஞ்சம் மைனஸ் என்பது பொதுவான கருத்து, அதையும் உடைத்து அவரை பாடவைத்து விட்டார். நா.முத்துகுமார் எழுதிய "பல்பு வாங்கிட்டேன்.... மச்சான் பல்பு வாங்கிட்டேன்..." என்ற பாடலை பாடியுள்ளார். இது ஐ படத்தில் வரும் மெர்சலாயிட்டேன்.... நான் மெர்சலாயிட்டேன் பாணியிலான பாடல் என்கிறார்கள்.