பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் வெளியாகும் தொலைக்காட்சி சேனல்களில், வடஇந்தியா மொழிகளில் வெளியான டப்பிங் சீரியல்களின் ஆக்கிரமிப்பு சமீபகாலமாக அதிகரித்து விட்டது. ஒரு மெகா சீரியலை தயாரிப்பதை விட டப்பிங் செய்து வெளியிடுவது செலவு குறைவு என்பதால் அதில் பல சேனல்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு, தமிழ் தொடர்களை விட, வடஇந்திய தொடர்கள் சினிமாவுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால், தற்போது தமிழ் டிவி தொடர்களை விட மாற்று மொழி தொடர்களையே நேயர்களும் அதிகமாக பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் படிப்படியாக தமிழில் தொடர்கள் தயாரிக்கப்படுவது குறைந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக இங்குள்ள சின்னத்திரை நடிகர்- நடிகைகளுக்கு வேலை வாய்ப்பும் குறைந்து விட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமும் நேற்று முன்தினம் சென்னையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் கடைபிடித்தனர். அதோடு, டப்பிங் சீரியல்களை அதிகமாக ஒளிபரப்பு செய்யும் 8 சேனல்களுக்கு நடிகர் நடிகைகள் நேரில் சென்று டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பக் கூடாது மனு கொடுத்தனர்.