மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல நடிகரான நாக சௌரியா நடிக்கும் புது படத்துக்கு ஹீரோயின் தேடும் படலம் நடந்தது. அவர் பிரபல இயக்குனர் நந்தினி ரெட்டியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் அந்த படத்தின் கதாநாயகி தேர்வு நடைபெற்றது. சுமார் 400 நடிகைகளின் ப்ரோபைல்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர் தான் நடிகை மாளவிகா நாயர் ஆவார். அவர் எவடே சுப்ரமண்யம் படத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். அதை பார்த்த இயக்குனர் நந்தினி ரெட்டி தனது புது படத்திற்கு ஹீரோயினாக ஆக்கி விட்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, நான் எவடே சுப்ரமண்யம் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் மாளவிகாவை சந்தித்தேன். அவருடைய கண்கள் தான் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஓட்டமாக அமையும் என்பதால் தான் அவரை தேர்வு செய்தோம். இந்த படம் அவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார்.