பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பொதுவாக ஹீரோயின்கள் திருமணமாகி சென்று விட்டால் அவர்களுக்கான சினிமா வாய்ப்பு குறைந்துவிடும். அப்படியே அவர்கள் திரும்ப சினிமாவுக்கு வந்தாலும் அவர்களுக்கு அக்கா, அண்ணி, அம்மா போன்ற குணச்சித்திர வேடங்கள் தான் கிடைக்கும். இதில் ஒரு சிலருக்கு மட்டும் தான் மீண்டும் ஹீரோயின் வாய்ப்பு அமையும். அவர்களில், பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய், கஜோல் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஐஸ்வர்யா ராய், குழந்தை பிறப்புக்கு பின்னர் சுமார் மூன்று ஆண்டு இடைவௌிக்கு பிறகு பின்னர் ஜாஸ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேப்போல் பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை கஜோல் சுமார் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். ரோகித் ஷெட்டியின் தில்வாலே படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் அவருக்கான சம்பளம் ரூ.5 கோடியாம். பாலிவுட்டின் தற்போதைய நடிகைகளான கரீனா கபூர், கத்ரீனா கைப் போன்றவர்களே இந்த சம்பளம் தான் வாங்குகின்றனர். ஆனால் கஜோலோ, திருமணம், குழந்தை பிறப்பு ஆகியவற்றுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவருக்கும் இதே சம்பளம் எனும்போது தற்போதைய இளம் நடிகைகள் வாயடைத்து போய் உள்ளனர்.