டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
8 வருடங்களுக்குப்பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அதோடு, கடந்த 7 வருடங்களாக குடும்பம், குழந்தைகள் என்று சினிமாவுக்கு துளியும் தொடர்பில்லாமல் முழு நேர இல்லத்தரசியாக வாழ்ந்து வந்த ஜோதிகா, இந்த படத்தில் நடித்தபோதும் நடிகை என்கிற எந்தவித சாயலும் இல்லாத அளவுக்கு ஒரு குடும்ப பெண்ணாகவே ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்.
மேலும், தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளின் நடிப்பை உன்னிப்பாக கவனித்த ஜோதிகா, அவர்கள் சிறப்பாக நடிக்கிறபோது கைதட்டி ஆரவாரமும் செய்திருக்கிறார். இன்னும் சிலரை உங்கள் நடிப்பு பிரமாதமாக இருந்தது என்று மனதார வாழ்த்தினாராம் ஜோதிகா. அவரிடமிருந்து இந்த பாராட்டுக்களை எதிர்பார்க்காத சக நடிகர்கள் அசந்து போனார்களாம்.
அதனால், 36 வயதினிலே படத்தில் நடித்த அனைவரும் ஜோதிகா கொடுத்த இந்த உற்சாகத்தினால் அதிக ஈடுபாடு காட்டி இயல்பாக நடித்தார்களாம். இப்படி நடித்தவர்கள் அனைவரிடமும் ஒரு குடும்பத்தினர் போன்று ஜோதிகா பழகியதால், படப்பிடிப்பு முடிந்து கடைசி நாள் பிரிகிறபோது சிலர் கண்கலங்கி விட்டார்களாம். அந்த அளவுக்கு ஒவ்வொருவரிடமும் ஆத்மார்த்தமான அன்போடு பழகினாராம் ஜோதிகா.