'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பரதேசியைத் தொடர்ந்து சசிகுமார்-வரலட்சுமி நடிப்பில் தாரை தப்பட்டை படத்தை இயக்கி வருகிறார் பாலா. கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை ரியலாக பதிவு செய்து கொண்டிருக்கும் அவர் கடந்த சில மாதங்களாகவே தஞ்சாவூரில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு என்ற படத்தை ஏற்கனவே தயாரித்த பாலா, தற்போது அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கியுள்ள, சண்டிவீரன் படத்தையும் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் கடந்த மாதமே முடிவடைந்து விட்டது. கோலிசோடா படத்திற்கு இசையமைத்த அருணகிரி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
மேலும், ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தாரை தப்பட்டை படத்தின் உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ் காட்சிகளை தற்போது படமாக்கிக்கொண்டிருக்கும் பாலா, அதை விட்டு விட்டு ஆடியோ விழாவுக்கு தன்னால் வர இயலாது என்று தெரிவித்து விட்டாராம். அதன்காரணமாக, சண்டிவீரன் ஆடியோ விழாவை தாரைதப்பட்டை படத்தின் க்ளைமாக்ஸ் வேலைகளை அவர் முடித்த பிறகு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.