எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஓரளவு தமிழ் பேசி விடுவார்கள். ஒரு கட்டத்தில் தங்களுக்கு தாங்களே டப்பிங் பேசும் அளவுக்கு முன்னேறி விடுவார்கள். ஆனால், தற்போது ரஜினி முருகன், பாம்பு சட்டை, இது என்ன மாயம் படங்களில் நடித்து வரும் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் நடிகைகள் போன்று நன்றாக தமிழ் பேசுகிறார். அவரது பேச்சில் மலையாள வாசணையே இல்லை.
எப்படி இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள்? என்று அவரைக்கேட்டால், நான் கேரள நடிகை என்றபோதும், எனது அம்மா மேனகா நடிகை என்பதால் எங்களுக்கு சென்னையிலுள்ள எம்எம்டிஏ காலணியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அதனால் நாங்கள் அடிக்கடி அந்த வீட்டிற்கும் வந்து தங்கிச்செல்வோம்.
அப்படி இருந்ததால் எனக்கு சின்ன வயதிலேயே தமிழ் பேச தெரிந்து விட்டது. அதோடு, தமிழ் எழுத படிக்கவும் தெரியும். பள்ளியில் தமிழ் படித்ததில்லை என்றாலும், எனது சென்னை தோழிகளிடம் தமிழ் எழுத்துக்களை கேட்டு தெரிந்து கொண்டேன். அதோடு காரில் செல்லும்போது சாலைகளின் இரண்டு பக்கமும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை எழுத்துக்கூட்டி படிப்பேன். இப்படியே என்னை வளர்த்துக்கொண்டேன். அதனால் இப்போது நன்றாக தமிழ் எழுதி படிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.