‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜயசேதுபதி- இனிகோ பிரபாகரன் நடித்த ரம்மி படத்தை இயக்கியவர் கே.பாலகிருஷ்ணன். 2014ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். அவரது இசையில் உருவான கூட மேல கூட வச்சி என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது.
ஆனபோதும், அதையடுத்து தனது அடுத்த படத்தை உடனடியாக தொடங்காத பாலகிருஷ்ணன், பல படங்களில் நடித்து வந்தார். அதில் சிகரம் தொடு உள்ளிட்ட சில படங்களில் அவரது கேரக்டர் ஓரளவு பேசப்பட்டதால், இப்போது தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தனது இரண்டாவது படவேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அப்படத்தில் சத்யராஜ், தம்பி ராமைய்யா உள்ளிட்ட சில பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க, கோலிசோடா படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம் ஆகியோரும் நடிக்கிறார்களாம். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்குகிறதாம்.