இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு திரையின் இளவரன் மகேஷ் பாபு தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஜோடி சேர்ந்து ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள், இயக்குநர் கோரட்லா சிவா இயக்கத்தில், மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மகேஷ் பாபு தனது அடுத்த படத்தின் வேலைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். ப்ரமொட்ஷவம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்க, இயக்குநர் ஸ்ரீகாந்த் அட்டலா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு மூன்று நாயகிகளாம். அதில் ஒருவர் நடிகை சமந்தா என கூறபடுகின்றது. இந்த தகவல் உறுதிப்படுதபட்டால் இப்படத்தின் மூலம் மகேஷ் பாபு - சமந்தா ஜோடி மூன்றாவது முறையாக இணைவர். குடு, சீதம்மா வைகிட்லோ சிரிமள்ளே செட்டு என இரண்டு படத்தில் ஏற்கனவே மகஷ் பாபு சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்க நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.