இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தைத் தொடர்ந்து தற்போது 'கோலி சோடா' பட இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லன்களாக, பசுபதி, ஜாக்கி ஷெராப் இருவரும் நடிக்கின்றனர். மற்றும் சம்பூர்ணேஷ் பாபுவும் முக்கிய வேடங்களில் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், நாளை (ஏப்ரல் 17) விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு சரியாக 12 மணி அளவில் '10 எண்றதுக்குள்ள' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து விரைவில் 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர், டிரெய்லரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.