தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்த லில், நடிகர் சரத்குமார் அணிக்கு எதிராக, நடிகர் விஷால் அணி மோதுவது தொடர்பாக, நடிகர் நாசர் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க., நட்சத்திர பேச்சாளரும், வில்லன் நடிகருமான ஆனந்தராஜ், தி.மு.க.,வை சேர்ந்த, பூச்சி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். சரத்குமார் அணி, அதிர்ச்சி அடைந்துள்ளது.
நடிகர் சங்க நிர்வாகிகளின் தேர்தல், மே மாதம் அல்லது ஜூனில் நடைபெறவுள்ளது. இதில், மீண்டும் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு, சரத்குமார்; பொதுச்செயலர் பதவிக்கு, ராதாரவி; பொருளாளர் பதவிக்கு, வாகை சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.
மோதுவது உறுதி
இந்த அணிக்கு எதிராக, தலைவர் பதவிக்கு, சிவக்குமார்; பொதுச்செயலர் பதவிக்கு, விஷால்; பொருளாளர் பதவிக்கு, நாசர் ஆகியோர் போட்டியிட ஆலோசித்து வருகின்றனர். தேர்தலில் இரு அணிகள் மோதுவது உறுதியாகி உள்ளது. நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டடம் வேண்டும் என்பதில் விஷால் தீவிரமாக இருக்கிறார். சொந்த கட்டடம் கட்டி முடித்த பின் தான், என் திருமணத்தை நடத்துவேன் என, விஷால் சபதம் செய்துள்ளார்.
சமீபத்தில், தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றினார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜீவா, ஆர்யா, மன்சூர் அலிகான், கருணாஸ் போன்றோர், விஷால் அணிக்கு ஆதரவு அளிக்க தயாராகி உள்ளனர். இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க., நட்சத்திர பேச்சாளரும், வில்லன் நடிகருமான ஆனந்தராஜ், விஷால் அணிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளார்.
நேற்று முன்தினம், சென்னை, தி.நகரில் உள்ள நாசர் வீட்டில், தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ஆனந்த ராஜ், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்றனர். நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எனவே, நடிகர் சங்க தேர்தலில், அ.தி.மு.க., நடிகர்கள், சரத்குமாருக்கு எதிராக செயல்படுவரா என்ற கேள்வி, திரையுலகத்தினரிடம் எழுந்தது. ஆனால், நாசர் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆனந்தராஜ் கலந்து கொண்டதால், அ.தி.மு.க., நடிகர்களின் ஆதரவு, சரத்குமார் அணிக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
நடுநிலை செயல்பாடு:
இதற்கிடையில், திரையுலகத்தினரின் வெறுப்பையும், அதிருப்தியை யும், அ.தி.மு.க.,வின் நடிகர், நடிகைகள் சம்பாதிக்க கூடாது; சங்க நிர்வாகிகள் தேர்தலில் நடுநிலை யாக செயல்பட வேண்டும் என, அ.தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டு உள்ளதால், கோலிவுட் வட்டாரம் உற்சாகம் அடைந்துள்ளது.