டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிப்பு பல்கலை கழகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து வந்துள்ள மூன்றாவது தலைமுறை விக்ரம் பிரபு. இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்தாலும், எந்தவித ஆரவாரமும், ஆடம்பரமும் இல்லாமல், அமைதியாகவேஇருக்கிறார். தன் திரை அனுபவங்கள் பற்றி, நம்முடன் அவர் மனம் திறந்து பேசியதிலிருந்து...
உங்களின் அடுத்த படம் பற்றி...?
சினிமாவுக்கு இளம் ரசிகர்கள் தான் அதிகம் வருகின்றனர். இவர்களின் ரசனைக்கேற்ப படம் கொடுக்க முயன்றால் ஜெயிக்கலாம். என் அடுத்த படமான, இது என்ன மாயம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம், ஒரு கவிதையை போல அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
உங்கள் ரசிகர்கள் குறித்து?
என்னோட ரசிகர்கள் மட்டுமல்லாமல், அப்பா, தாத்தாவின் ரசிகர்களும் தங்கள் வீட்டு பிள்ளையை போல நினைத்து, என் படங்களை பார்க்க வருகின்றனர்; பாராட்டுகின்றனர். தாத்தாவை போல, அப்பாவை போல நீயும் சினிமாவில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என, சிலர் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டு போகும் அளவிற்கு, என்மீது பாசம் வைத்துள்ளனர்; ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
தாத்தா சிவாஜி, அப்பா பிரபு ஆகியோரால் தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்பு முடியும் என நம்புகிறீர்களா?
தாத்தா, அப்பாவின் சினிமா காலம் இப்போதில்லை. சினிமாவில், அப்போது, 10 மடங்கு போட்டியென்றால், இப்போ, 100 மடங்கு போட்டியை சமாளித்தால் தான் ஜெயிக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என, கூறுவர்; முயற்சிப்போம்.
முன்னணி நடிகர்களின் படங்கள், கதை திருட்டு பிரச்னையில் சிக்குவது அதிகரித்துள்ளதே?
இப்போது, சினிமா தயாரிப்பு சிரமமானதாகத் தான் இருக்கிறது. யாருக்கு, யார் மேல் என்ன பிரச்னை ஏற்படும் என, சொல்லமுடியாது. எந்த பிரச்னை என்றாலும் நியாயமானது என்றால், நல்ல தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்திற்கு புறம்பானது என்றால், நினைத்தது நடக்காமல் போகும். தற்போதைய நிலையில், எந்த பிரச்னையாக இருந்தாலும், சமாளிப்போம் என, படம் எடுக்க துணிச்சல் உள்ளவர்களால் மட்டுமே படத்தை வெளியிட முடியும். படம் எடுப்பதை விட, ரிலீஸ் செய்வது ரொம்ப சிரமமானதாக உள்ளது. நான், நடிகர் மட்டும் தான்; சினிமா சங்கங்களில் ஜாம்பவான்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஒன்று சேர்ந்து, சினிமா பிரச்னைகளை தீர்க்க, நல்ல முடிவு எடுக்கவேண்டும்.
சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டதாக பேசப்படுகிறதே?
தயாரிப்பாளரின் நடிகராக இருக்க வேண்டும் என, நினைக்கிறேன். சினிமா தயாரிப்பில் உள்ள சிரமங்கள் எனக்கு நன்றாக தெரியும். தயாரிப்பாளர் என்னை விரும்பி நடிக்க வைக்கும் அளவிற்கு தான், என் சம்பளம் இருக்கும். சினிமாவில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு இது தெரியும். என் நினைப்பெல்லாம், நல்ல தயாரிப்பு நிறுவனங்களின், நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்பது தான்.
லட்சுமி மேனன், ப்ரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உங்களுக்கு யாரின் நடிப்பு பிடித்தது?
மூன்று பேருமே சுறுசுறுப்பானவங்க தான். மூன்று பேருமே தனித்தனி ஸ்டைலை பின்பற்றுகின்றனர். மூவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இயக்குனர் எதிர்பார்ப்பதை விட, சிறப்பாக நடிக்க வேண்டும் என்று துடிப்பாக இருப்பவர்கள். இவர்களோடு சேர்த்து, எனக்கு கொக்கி போட நினைத்து தான் இந்த கேள்வி என, நினைக்கிறேன்; நடக்காது சார்.
காமெடி படங்களுக்கு தான் வரவேற்பு கிடைக்கிறது; குடும்ப படங்களுக்கு வரவேற்பு இல்லை என, புலம்பல் ஓசை அதிகம் கேட்கிறதே?
மனுஷங்களுக்கு இப்ப எல்லா வகையிலும் டென்ஷன் தான். எல்லாத்தையும் மறந்து, சில மணி நேரமாவது நிம்மதியாக இருக்கலாம் என்ற நினைப்பில் தான் இப்போது சினிமாவுக்கு வர்றாங்க. சென்ட்டிமென்ட், குடும்ப பிரச்னை எல்லாம் இப்போது வேலைக்கு ஆகாது. பத்து வருஷத்துக்கு முன், இந்த படத்தை எடுத்திருந்தா ஓடியிருக்கும் என, விமர்சிப்பது மட்டு மல்லாமல், வாட்ஸ் அப், பேஸ்புக்,டுவிட்டர்லயும் கலாய்ச்சிடுறாங்க. இவர்களிடமிருந்து தப்பிக்க, அவர்களின் மனநிலைக்கு, ரசனைக்கு ஏற்ப படம் எடுக்கிறது தான் சரியானதாக இருக்கும்.
விமர்சனங்களை தவிர்க்க முடியும்; ஜெயிக்க முடியும். எந்த மாதிரி கேரக்டரில் நடிக்க ஆசை?
தெலுங்கில், மகதீரா படம் மாதிரியான கதைகளில் நடிக்க ஆசை. சம காலத்துக்கு ஏற்றபடி, ஜனரஞ்சகமான கதையாகவும், அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படமாகவும் இருக்க வேண்டும். தெலுங்கிலிருந்து அழைப்பு வந்ததாக...கும்கி, இவன் வேற மாதிரி படங்கள், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு நல்லா ஓடியிருக்கு. சிகரம் தொடு, அரிமா நம்பி படங்கள் ரீமேக் ஆக உள்ளன. இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின், தெலுங்குக்கு போவது குறித்து யோசிப்போம்.