தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் மிகவும் இணக்கமாக, ஒருவர் மற்றொருவரின் முயற்சிகளை பாராட்டி, ஊக்கப்படுத்தி, ஆரோக்கியமான நட்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கு மலையாள சினிமாவும், மம்முட்டியின் மகனும், இளம் முன்னணி நடிகருமான துல்கர் சல்மானும் விதிவிலக்கல்ல... அந்தவிதமாக சமீபத்தில் ஒரு பேட்டியின் போது பிருத்விராஜின் திறமையை எந்தவித ஈகோவுமின்றி புகழ்ந்தார் துல்கர் சல்மான்..
“நான், பஹத் பாசில், நிவின் பாலி அனைவரும் ஒரே நேரத்தில் பீல்டிற்கு வந்தவர்கள். ஆனால் எனது தந்தையும் மோகன்லால் சாரும் மலையாள இன்டஸ்ட்ரியை கைக்குள் வைத்திருந்த நேரத்தில் உள்ளே நுழைந்து தனது திறமையான நடிப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் பிருத்விராஜ். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும், கதாபாத்திரங்களும் அவரை நம்மில் ஒரு ஆளாகவே உணரச்செய்யும். அவரின் இந்த வெற்றி அவரது சொந்த முயற்சியால் மட்டுமே பெற்றது” என பாரட்டியுள்ளார் துல்கர் சல்மான்.
ஏற்கனவே 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தில் நடித்த துல்கரின் நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டு அப்போதே மனம் திறந்து பாராட்டியவர்தான் பிருத்விராஜ்.