ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கதையை நம்பி ஹீரோவானவர்கள் மத்தியில் உதயநிதி மட்டும் சந்தானத்தை நம்பி ஹீரோவானவர். ஒரு கல் ஒரு கண்ணாடி தொடங்கி நண்பேன்டா வரை உதயநிதி ஹீரோவாக நடித்த மூன்று படங்களிலும் சந்தானம் இன்னொரு ஹீரோ போலவே படம் முழுக்க வலம் வந்தார். குறிப்பாக நண்பேன்டா படத்தில் சந்தானம் இல்லாமல் உதயநிதி மட்டும் தோன்றிய காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் உதயநிதி. இது ஒரு பக்கம் இருக்க, உதயநிதி - நயன்தாரா விவகாரத்தில் சந்தானத்துக்கும் உதயநிதிக்கும் மனக்கசப்பு என்று தகவல் அடிபட்டது. நண்பேன்டா புரமோஷனுக்காக செய்தியாளர்களை உதயநிதி சந்தித்தபோது அவரிடம் இது பற்றி கேட்கப்பட்டது. எனக்கும் சந்தானத்துக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. காலையில் கூட அவரிடம் பேசினேன் என்று சொன்னார் உதயநிதி.
அதை யாரும் நம்பவில்லை. இந்நிலையில் சந்தானம் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது.