வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சூர்யா தற்போது மும்பையில் இருக்கிறார். மாஸ் படத்திற்கு பிறகு 'யாவரும் நலம்' விக்ரம்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் முதல்கட்ட பணிகளுக்காக சென்றுள்ளார். இந்தப் படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த நிலையில் சூர்யா, இந்தி படத்தில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிப்பதாவும், நந்திதா சின்ஹா என்பவர் தயாரிப்பதாகவும், அதனால்தான் அவர் மும்பை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை சூர்யா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "சூர்யா இந்திப் படம் எதிலும் நடிக்கவில்லை. அந்த தகவல்கள் முற்றிலும் தவறானது. நந்திதா சின்ஹா என்கிற தயாரிப்பாளர் யார் என்றே தெரியாது அவரை பார்த்ததுகூட இல்லை. தயவு செய்து தவறான தவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.