அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஜெயம்ரவி, த்ரிஷா நடித்துள்ள படம் பூலோகம். எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி உள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். படம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், ஐ படத்தை வெளியிட்டு விட்டு பின்னர் இதனை வெளியிடலாம் என்று நினைத்திருந்தார். தற்போது ஐ படம் வெளியாகிவிட்ட நிலையில் பூலோகம் படத்தை வெளியிட ஏற்பாடு செய்து வந்தார்.
இந்த நிலையில் படத்தை வெளியிட கடன் வசூலிக்கும் தீர்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஐ, பூலோகம் இரண்டு படத்தின் மீதும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் ஆஸ்கர் பிலிம்ஸ் கடன் பெற்றுள்ளது. கடனை அடைக்காமலேயே ஐ படத்தை வெளியிட்டு விட்டனர். தற்போது பூலோகம் படத்தையும் வெளியிட முயற்சித்ததால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு படத்தின் வீடியோ மற்றும் ஆடியோ காப்பிகள் வெளியிடவும் தொலைக்காட்சி உரிமம் விற்கவும் தடை விதித்தது.