பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கமலின், உத்தம வில்லன் படத்தை வெளியிட பெருந்தொகையை தர வேண்டும் என, தியேட்டர் உரிமையாளர்கள் மிரட்டியதாக வெளியான தகவல், தமிழக திரையுலகை ஒரு கலக்கு கலக்கி விட்டது. நேற்று அவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, பதில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க கூட்டம், சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில், கமலின், உத்தம வில்லன் படத்திற்கு, ரெட் கார்டு போட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. விஸ்வரூபம் படத்தை, டி.டி.எச்., மூலம் வெளியிட கமல் முயற்சி எடுத்தார். அதை தடுத்த தியேட்டர் உரிமையாளர்கள் மீது இந்திய போட்டி கமிஷனில் புகார் கொடுத்தார். இதில், குறிப்பிட்ட தொகையை தியேட்டர் உரிமையாளர்கள் கட்டினால் தான் வழக்கு முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, கமலின் அடுத்த படமான, உத்தம வில்லன் படம் வெளியாக, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், உத்தம வில்லன் படப் பிரச்னை குறித்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர், இயக்குனர், வினியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற அவசர கூட்டம், சென்னையில் நேற்று மாலை நடந்தது.
பின், உத்தம வில்லன் படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரும், இயக்குனருமான லிங்குசாமி கூறியதாவது: சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், உத்தம வில்லன் படத்தை வெளியிடாமல் தடுக்க, ரெட் கார்டு போட்டிருப்பதாக தகவல் வந்தது. மேலும், பெரிய அளவில் ஒரு தொகையை அவர்கள் கேட்டதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது. எனவே, முக்கிய சங்கங்களுடன் பேசி, பட வெளியீட்டு பிரச்னை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு எந்த தடையும் கிடையாது. உத்தம வில்லன் படம் திட்டமிட்டபடி, மே 1ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட வினியோகஸ்தர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், இனிமேல், சினிமா தொடர்பான பிரச்னை ஏற்பட்டால், கூட்டு நடவடிக்கை குழு மூலம் பேசி முடிவு செய்யப்படும். இக்குழு, ஒரு வாரத்தில் அமைக்கப்படும், என்றார்.
சென்னை தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், உத்தம வில்லன் படத்தை, சென்னையில் நான் தான் வெளியிடுகிறேன். மே 1ம் தேதி, சென்னையில், 30 தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.