அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
2012ல் செகண்ட் ஷோ என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் துல்கர்சல்மான். அந்த வகையில், மூன்றே ஆண்டில் 15 படங்களில் அவர் நடித்து விட்டார். அதில் தமிழில் இரண்டு படங்கள். ஒன்று வாய் மூடி பேசவும். இன்னொன்று ஓ காதல் கண்மணி. துல்கர்சல்மானுக்கு மலையாளத்தில் இருக்கும் ரசிகர்களை மனதில் கொண்டு அவரை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம். இந்த படம் தனது கேரியரில் முக்கியமான படம் என்பதால், கடந்த 6 மாதங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இப்படத்தில் நடித்து முடித்து விட்ட துல்கர்சல்மான், வருகிற 17-ந்தேதி ஓ காதல் கண்மணி திரைக்கு வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் சென்னையில்தான் படித்தேன். அதனால் மணிரத்னம் இயக்கிய படங்கள் திரைக்கு வரும்போது ஒரு ரசிகனாய் தியேட்டர்களைத் தேடி ஓடிய நாட்கள் இப்போதும் என் கண்முன்னே தோன்றுகின்றன. அப்படிப்பட்ட மணிரத்னத்தின் படத்தில் இப்போது நானே நடித்திருக்கிறேன் என்பது பிரமிப்பாக உள்ளது. படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு, படத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும், இந்த படம் வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. அன்றைய தினம் எனது தங்கையின் பிறந்த நாளும்கூட. அதனால் அந்த நாள் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கப்போகிறது என்கிறார் துல்கர்சல்மான்.